அகநானூறு | அம்மூவனார்
திணை :- நெய்தல்
துறை :- தலைவன் பாங்கனுக்கு கூறியது
பாடல் :-
பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி
என்றூழ் விடர கன்றம் போகும்
கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண்கள் உப்பெனச்
சேரி விலைமாறு கூறலின் மனைய
விளியறி ஞமலி குரைப்ப வெரீஇய
மதர்கயல் மலைப்பின் அன்னகண் எமக்கு
இதைமுயல் புனவன் புகைநிழல் கடுக்கும்
மாமூ தள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வந் தீர வாங்குந் தந்தை
கைபூண் பகட்டின் வருந்தி
வெய்ய உயிர்க்கும் நோயா கின்றே.
பாடல் விளக்கம் : -
பெரிய ஆர்ப்பரிக்கும் கடலில் சென்று மீன்பிடித்து வருபவர்கள் பரதவர்கள். அவர்கள் கடல் சூழ்ந்த நிலங்களில் உப்பளங்களில் உப்புகளை விளைவிப்பர்.
No comments:
Post a Comment