புறநானூறு
* புறநானூற்றில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன. அவற்றில்
138 பாடல்கள் 43 மூவேந்தர்களை பற்றியது
141 பாடல்கள் 48 குறுநில மன்னர்களைப் பற்றியது
121 பாடல்கள் பெயர் தெரியாதோர்.
(138+141+121=400)
''138 மூவேந்தர்களை பற்றியது என்பதில்''
27 பாடல்கள் சேர மன்னர்கள் பற்றியது.
37 பாடல்கள் பாண்டிய மன்னர்கள் பற்றியது.
74 பாடல்கள் சோழ மன்னர்கள் பற்றியது.
(27+37+74=138)
''141 குறுநில மன்னர்கள் என்பதில்''
23-பாடல்கள் அதியமானை பற்றியது.
17-பாடல்கள் வேள்பாரியை பற்றியது.
14-பாடல்கள் ஆய் அண்டிரனைப் பற்றியது.
07-பாடல்கள் பேகனைப் பற்றியது.
07-பாடல்கள் குமணனைப் பற்றியது.
06-பாடல்கள் காரியைப் பற்றியது.
05-பாடல்கள் நாஞ்சில் வள்ளுவன் பற்றியது.
05-பாடல்கள் பிட்டங்கொற்றான் பற்றியது.
04-பாடல்கள் எழினியைப் பற்றியது.
(23+17+14+7+7+6+5+5+4=141)
4--குறுநில மன்னர்கள் மும்மூன்று பாடல்களிலும்.
6--குறுநில மன்னர்கள் இரண்டிரண்டு பாடல்களிலும்.
29--குறுநில மன்னர்கள் ஒவ்வொரு பாடல்களிலும் பாடப்பட்டுள்ளனர்.
157--புலவர்கள் புறநானூற்றின் 386 பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்களில்.
15--பேர் பெண்பால் புலவர்கள்.
142-பேர் ஆண்பால் புலவர்கள்.
(15+142=157)
மீதமுள்ள 14 பாடல்களைப் பாடியவர்களின் பெயர் தெரியவில்லை.
இது மட்டுமல்லாது.
*புறம்+நான்கு+நூறு=புறநானூறு.
- - புறத்தினை பற்றிய நானூறு பாடல்கள் கொண்ட நூல் இது
*பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பாடி தொகுக்கப்பட்டது.
*இந்நூலுக்கு புறம், புறப்பாட்டு என்று வேறுபெயர்களும் உண்டு.
*இந்நூலிற்கு கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர்-பாரதம் பாடிய பெருந்தேவனார்.
*இந்நூல் மூலம் முடியுடை வேந்தர்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள், சேனைத்தலைவர்கள், வீரர்கள், கடையெழு வள்ளல்கள், கடைச்சங்கப்புலவர்கள், எனப் பலருடைய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
*அக்கால மக்களின் வாழ்க்கை முறையை அறியலாம்.
*எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
*காலம் இரண்டாம் நூற்றாண்டு.
*புறநானூற்றின் சில பாடல்களை ஜி. யு போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
No comments:
Post a Comment